நம் சீர்மிகு ஜமால் முகமது கல்லூரியின் ”கல்லூரி நாள் விழா” - 27.09.2021 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் தமிழாய்வுத்துறையின் சார்பில் பல்கலைக்கழக அளவிலான தேர்வில் 5-வது இடம் பிடித்த முதுகலை மாணவர் திரு. ஷா.முஹம்மது அஸ்ரின் அவர்களைப் பாராட்டும் வகையில் விழா மேடையில் கல்லூரி நிர்வாகத்தினர் முன்னிலையில், சிறப்பு விருந்தினர் தருமபுரி கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் முனைவர் சி.ஜோதி வெங்கடேசுவரன் அவர்கள் மாணவருக்குச் சான்றிதழ் வழங்கினார்.