Department of Tamil

முனைவர் பட்ட பொது வாய்மொழித்தேர்வு

  • 9
  • 28
  • 2021

சீர்மிகு ஜமால் முகமது கல்லூரி, முதுகலைத் தமிழாய்வுத்துறையில் முனைவர் அ.சையத் ஜாகீர் ஹசன் அவர்களுடைய நெறியாள்கையின் கீழ் ‘எட்டுத்தொகைப் புறநூல்களில் செம்மொழிப் பண்புகள்’ எனும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வரும் ஆய்வாளர் திரு.செ.சுகவனேஸ்வரன் அவர்களுக்கு முனைவர் பட்ட பொது வாய்மொழித் தேர்வு 28.09.2021 அன்று பிற்பகல் 2.00 மணியளவில் இணைய வழியில் நடைபெற்றது. இதில் புறத்தேர்வாளாராக திருநெல்வேலி, சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் தமிழாய்வுத்துறை தலைவர்  முனைவர் ச.மகாதேவன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.  மேலும் இந்த இணையவழி நிகழ்வில் நமது கல்லூரி நிர்வாகத்தினர், துறைப்பேராசிரியர்கள், சகோதர துறைப்பேராசிரியர்கள், ஆய்வு மாணாக்கர்கள், மாற்றுக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Event Photo Gallery