Department of Tamil

பன்னாட்டுக் கருத்தரங்கம்

  • 3
  • 3
  • 2022

தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகம் இலக்கியத்துறை, திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரி முதுகலைத் தமிழாய்வுத்துறை, திருச்சிராப்பள்ளி உருமு தனலெட்சுமி கல்லூரி, திருச்சிராப்பள்ளி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி இணைந்து நடத்திய ”பன்னாட்டுக் கருத்தரங்கம்” மார்ச் 3, 4 ஆகிய நாட்களில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. ”தமிழ் இலக்கிங்களில் அறம்“ எனும் பொருண்மையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் மாண்பமை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வி.திருவள்ளுவன் அவர்கள் தலைமையுரையாற்றிகனார், பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் க.சங்கர் அவர்கள் முன்னிலை வகிக்க, கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜெ.தேவி அவர்கள் நோக்கவுரையாற்றினார். விழாவில் பேரா. முனைவர் இராம. ஸ்ரீநிவாசன் சிறப்புரையாற்றினார். கருத்தரங்க நிறைவு விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் முனைவர் ம.செல்வம் அவர்கள் சிறப்புரையாற்ற, முனைவர் இரா.கலியபெருமாள் அவர்கள் நிறைவுரையாற்றினார். விழாவில் பல்துறைச் சார்ந்த பேராசிரியர்களும், ஆய்வு மாணவர்களும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.  

Event Photo Gallery