திரைப்பட இயக்குனரும், எழுத்தாளருமான திரு.கஸ்தூரி ராஜா அவர்கள், தான் எழுதிய “பாமர இலக்கியம்“ எனும் புதின இலக்கியத்தை அறிமுகம் செய்வதற்காக 23.04.2023 அன்று தமிழாய்வுத்துறைக்கு வருகை புரிந்தார். தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் அ.சையத் ஜாகீர் ஹசன் அவர்கள் இயக்குனர் அவர்களை வரவேற்றார். உடன் தமிழாய்வுத்துறையின் மூத்த பேராசிரியர் முனைவர் வ.முஹம்மது யூனுஸ் அவர்களும், தமிழத்துறைப் பேராசிரியர்களும் இருந்தனர்.